முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஆகஸ்ட், 2017 at 2:46 PM
பகிர்:

அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட்டுதான் உள்ளோம். அணியில் பிளவு என்பதே கிடையாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு உள்ள சந்தேகத்தை நீக்கவே இந்த உத்தரவு. ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை நினைவிடமாக்க மக்கள் விரும்புவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.