தமிழ்நாடு

இபிஎஸ்- ஓபிஎஸ்க்கு அரியலூரில் உற்சாக வரவேற்பு

DIN

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அரியலூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க பிற்பகல் வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த 6 மாதங்களாக தனி தனி அணியாக செயல்பட்டு வந்த இவர்கள், கடந்த திங்கள்கிழமை கருத்து வேறுபாடுகளை களைந்து ஓரணியாக இணைந்தனர். இணைப்புக்கு பிறகு நடைபெறும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என்பதால், அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வந்து இருவரையும் உற்சாகமாக வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT