தமிழ்நாடு

மதுரை ஆதீன மடத்தில் நித்யானந்தா நுழைய நிரந்தர தடை கோரிய வழக்கில் டிச.13ல் தீர்ப்பு

DIN

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை கோரிய வழக்கில் வரும் 13ஆம் தேதி தீர்ப்பு வழக்கப்பட உள்ளது.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இவ்வழக்கில் டிசம்பர் 13ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறிய நீதிபதிகள் அதுவரை மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்தியானந்தா நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT