சீர்காழியில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழியில் திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பாஜகவினர் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாஜவினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.