தமிழ்நாடு

மீனவர்களை மீட்காததை கண்டித்து சென்னையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்

DIN

மீனவர்களை மீட்காததை கண்டித்து சென்னையில் நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
மீனவர்களை மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆளுநரிடம் மீனவர் பிரச்னை குறித்து பேச நேரம் கேட்டுள்ளேன். 

ஈபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது. திருமாவளவன் விளக்கம் தந்த பின்பும் அவரை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஒக்கி புயலில் சிக்கி மீனவர்களில், 582 பேர் இதுவரை மீட்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய் நிர்வாக ஆணையாளர் கொ.சத்யகோபால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT