முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ, வருமானவரித் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்டில் அரசு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனன.
மன்மோகன்சிங் அமைச்சரவையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜெயந்தி நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.