தமிழ்நாடு

மோசடி வழக்கு : முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல்

DIN


மோசடி வழக்கு தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றும் அருள்மணி என்பவர், செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அரசியல் உள்நோக்கம் மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT