551 மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒக்கி புயலின் போது மாயமான 551 மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.