தமிழ்நாடு

அன்புமணி ராமதாஸ் நாளை வீடு திரும்புவார்! பாமக அறிக்கை

தினமணி

அன்புமணி ராமதாஸ் நாளை வீடு திரும்புவார் என்று பாமக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி இராமதாஸ் நேற்று காலை தருமபுரி தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஓய்வின்றி தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் அவருக்கு சோர்வும், லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது. 

இதையடுத்து பெங்களூரிலுள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அவருக்கு முழுமையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பதும், உடல்நிலை இயல்பாக இருப்பதும் தெரியவந்தது. எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

அதன்படி இன்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு அன்புமணி ராமதாஸ் நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT