தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும்: கொறடா உத்தரவு

DIN

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா தமிழகத்தின் 21வது முதல்வராக நாளை அல்லது வியாழக்கிழமை (பிப்.9) பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தில்லியில் இருக்கிறார். முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதில் சில நடைமுறைகள் இருக்கின்றன.
ஆளுநர் தமிழகத்தில் இல்லாத சூழ்நிலையில் அந்த நடைமுறைகளைத் தொடங்க முடியாது. எனவே, அவர் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கோ, தொகுதிகளுக்கோ உடனடியாகச் செல்ல வேண்டாம் என அரசு கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT