தமிழ்நாடு

என்னை நீக்க யாருக்கும் உரிமை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

DIN

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உங்களை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
மறைந்த தலைவர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது இந்த பொருளாளர் பதவி. ஜெயலலிதா என்னை புகழும் அளவுக்கு மன நிறைவுடன் பணியாற்றி உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலிடனும் சிரித்து பேசியதாக சசிகலா குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசமே சிரிப்பில்தான் உள்ளது. சிரிப்பது ஒரு தவறல்ல. என் மடியில் கனம் இல்லை. அதனால் எனக்கு பயம் இல்லை என்றார் அவர்.
மைத்ரேயன் ஆதரவு: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், பரிதி இளம்வழுதி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT