தமிழ்நாடு

உழைப்பு இல்லாமல் பல முறை பதவியில் இருந்தவர் பன்னீர் செல்வம்: நவநீத கிருஷ்ணன் எம்.பி

DIN

சென்னை: எந்தவொரு உழைப்பும் இல்லாமல் பல முறை பதவியில் இருந்த பன்னீர் செல்வம், பதவி ஆசை பிடித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீது குற்றம்சாட்டியுள்ளார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிக்காக சசிகலா தன் வாழ்க்கையை அர்பணித்தவர். ஜெயலலிதாவுடன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக உடனிருந்து தொண்டாற்றியவர் சசிகலா.
இதன்காரணமாக சசிகலா முதல்வர் ஆவதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டும். ஆனால், எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் பல முறை பதவியில் இருந்தவர் பன்னீர் செல்வம்.
பன்னீர் செல்வம் பதவி ஆசை பிடித்து இவ்வாறு தவறாக பேசி வருகின்றார். அவர் சுயநலக்காரர் என்பது பொதுமக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது. என நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT