சென்னை: காப்பாற்றப்பட வேண்டிய கட்டத்தில் அதிமுக உள்ளது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவரும் சசிகலாவின் ஆதரவளுமான மதுசூதன், முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்று கூறினார்.
எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்திற்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே யாருடைய வற்புறுத்தலும் இன்றி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன்.
தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை. எனவே, அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். காப்பாற்றப்பட வேண்டிய கட்டத்தில் அதிமுக இருப்பதாக உள்ளது.
ஆபத்தான காலங்களிலும் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர் பன்னீர்செல்வம். எனவே, தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை என்று மதுசூதனன் கூறினார்.