தமிழகத்தில் அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடந்து கொள்ள வேண்டும் என, திரைப்பட இயக்குநர் அமீர் கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
அரசியல் சாசன சட்டப்படி சசிகலாவை பதவி ஏற்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தாமதிப்பது ஏன் என்பதையும், அதில் உள்ள சட்டச் சிக்கலையும் மக்களுக்கு விளக்குவது அவசியம். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிப் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டு தனியார் விடுதிகளில் தங்குவது சரியல்ல. அவர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசியல் சூழலை சாதகமாக்கி, பாஜக அரசியல் விளையாட்டை நடத்துவது சரியல்ல என்றார்.