தமிழ்நாடு

அரசியல் சட்டப்படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும்: இயக்குநர் அமீர்

DIN

தமிழகத்தில் அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடந்து கொள்ள வேண்டும் என, திரைப்பட இயக்குநர் அமீர் கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
அரசியல் சாசன சட்டப்படி சசிகலாவை பதவி ஏற்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தாமதிப்பது ஏன் என்பதையும், அதில் உள்ள சட்டச் சிக்கலையும் மக்களுக்கு விளக்குவது அவசியம். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிப் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டு தனியார் விடுதிகளில் தங்குவது சரியல்ல. அவர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசியல் சூழலை சாதகமாக்கி, பாஜக அரசியல் விளையாட்டை நடத்துவது சரியல்ல என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT