விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலராக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டார்.
இரா.லட்சுமணன் எம்.பி. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து இரா.லட்சுமணனை கட்சியின் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா உடனடியாக நீக்கினார்.
அவருக்குப் பதிலாக, விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சி அலுவலகம் கைப்பற்றப்பட்டது: கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாக, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இரா.லட்சுமணன், ராஜேந்திரன் ஆகியோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்ததை வரவேற்கும் வகையில், அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.