தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பிளாட்டினம் மதிப்பீடு சான்றிதழ்

DIN

இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய பசுமை குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி.) பிளாட்டினம் மதிப்பீடு சான்றிதழ் தரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரயில் நிலையங்கள் உயர்ந்துள்ளன.
காரிடர் ஒன்றில் சின்னமலை, கிண்டு, நங்கநல்லூர், மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய 5 நிலையங்களும், காரிடர் 2-இல் உள்ள கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர், தாமஸ்மவுண்ட் ஆகிய 8 நிலையங்களும் பிளாட்டினம் மதிப்பீடு தரத்துக்கு உயர்ந்துள்ளன.
இந்த 13 நிலையங்கள் மதிப்பீட்டுக்காக இந்திய பசுமை கட்டடம் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 72 புள்ளிகள் எடுத்து, தரப் பிரிவில் உயர்ந்துள்ளன.
பிளாட்டினம் மதிப்பீடு அளவு சான்றிதழ், சர்வதேச தலைமைக்கான அங்கீகாரம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT