செங்கோட்டை -ஆரியங்காவு இடையிலான அகலப்பாதை பணிகள் நிறைவடைந்ததையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
செங்கோட்டை -ஆரியங்காவு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் மேற்பார்வையில், வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து பாதுகாப்பு கருதி, இந்தப் பகுதியில் யாரும் அத்துமீறி நுழைய வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.