தமிழ்நாடு

சசிகலா, எடப்பாடி மீது போலீஸ் வழக்குப் பதிவு

DIN

அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, சட்டப்பேரவை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அடுத்த கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியிலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியேறிய மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், சசிகலா தரப்பினர் தன்னை கடத்தி வைத்திருந்ததாகவும், மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர், கூவத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும் தன்னை கடத்தி வைத்திருந்தனர்' எனத் தெரிவிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT