தமிழ்நாடு

தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி காலமானார்

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான எம்.என். கிருஷ்ணமணி (68), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்ரவரி 15)

ஆசிரியர்

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான எம்.என். கிருஷ்ணமணி (68), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்ரவரி 15) காலமானார்.
பெங்களூருவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக ஒய்ட்பீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது மனைவி ராதா, 2007-ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். இத்தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் மூவரும் வழக்குரைஞர்கள். மகன் ஓவியர். உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக நான்கு முறையும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக மூன்று முறையும், தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) தலைவராக ஒரு முறையும் கிருஷ்ணமணி பதவி வகித்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரிடமிருந்து "பத்மஸ்ரீ' விருது பெற்றுள்ளார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர், புட்டப்பர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர். பல ஆன்மிக நூல்களை எழுதியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT