எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜோதி தொடர்ந்துள்ள இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2. 15 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி.ராமேஷ், அனிதா சுமந்த் ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.