தமிழ்நாடு

எம்எல்ஏ-க்களுக்கு வெளி மாநிலப் பாதுகாவலர்கள்

DIN

மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை வெளி மாநிலப் பாதுகாவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
எம்எல்ஏ-க்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்னைக்கு சென்றனர். மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் விடுதிக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரை கண்ணன், எஸ்.பி. முத்தரசி, மாமல்லபுரம் டிஎஸ்பி டேவிட் ஆகியோர் தலைமையில் போலீஸார், கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT