தமிழ்நாடு

கைதி தப்பி ஓட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்திலிருந்து கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணைக் கைதியை, போலீஸார் தேடி வருகின்றனர்.
களக்காடு அருகேயுள்ள கீழத்தேவநல்லூரைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (22). கடந்த சில தினங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தியது தொடர்பாக, இவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மணிகண்டனை பிடித்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைவிலங்கிட்டனர்.
மாலை 4 மணிக்கு ஒரு காவலர் மட்டும் காவல் நிலையத்தில் பணியில் இருந்தாராம். அப்போது, திடீரென மணிகண்டன் கைவிலங்குடன் காவல் நிலைய சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து, தப்பியோடி விட்டாராம்.
இதுகுறித்து நான்குனேரி காவல் உதவிக் கண்காணிப்பாளர் சுகுணாசிங் களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். தப்பியோடிய மணிகண்டனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT