தமிழ்நாடு

பன்றிக் காய்ச்சலுக்கு மதுரையில் 2 பேர் பலி

DIN

மதுரை அரசு மருத்துவமனையில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மதுபானக்கூட ஊழியர் உள்ளிட்ட இருவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர்.
மதுரை கோ.புதூர் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (64). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
சிவகங்கை மாவட்டம், சருகணியை அடுத்துள்ள கீழ்குடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (51). இவர், திருப்பூரில் உள்ள மதுபானக் கூடத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செல்லத்துரை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜூ கூறியது:
திருப்பூர் மருத்துவமனையில், செல்லத்துரைக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இங்கு சோதனை செய்தபோது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. பரிசோதனைக் கூட கருவிகளின் தரத்தைப் பொறுத்து முடிவுகள் மாறுபடலாம். ஆனாலும், சிகிச்சை பலனின்றி செல்லத்துரை இறந்து விட்டார் என்றார்.
தடுப்பூசி: இதுகுறித்து மாநகராட்சி நகர் நல உதவி மருத்துவ அலுவலர் பார்த்திபன் கூறியது:
பன்றிக் காய்ச்சலால் இறந்த சண்முகசுந்தரத்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் 15 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குத் தேவையான மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கோ.புதூர் பகுதி முழுவதும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT