தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 30-இல் தொடங்கி, ஜனவரி 4-இல் நிறைவு பெற்றது. 100 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 38 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு காணப்பட்டது.
இதையடுத்து, அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலையே நிலவி வந்தது. பல்வேறு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவின் காரணமாக குளிர் காணப்பட்டது.
இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மைய அதிகாரிகள் கூறியது:-
தென்மேற்கு வங்கக் கடலில் தாய்லாந்து அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளது. இதனால், ஜனவரி 19 (வியாழக்கிழமை) முதல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். புதன்கிழமை வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT