ரூ.803 கோடி செலவில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் உரையில் கூறியிருப்பது:-மானாவாரி விவசாயப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும், அந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் நோக்குடனும் 2016-17-ஆம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் ரூ.803 கோடியில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.
தானிய உற்பத்தியில் சாதனை: மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி தொடர்ச்சியாக 3-ஆவது ஆண்டாக 100 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.