முகப்பு
தமிழ்நாடு

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னையில்?

ஆந்திர மாநிலத்தின் கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

சென்னை: ஆந்திர மாநிலத்தின் கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமடாக அதிராம்பட்டினம், சின்னக்கல்லாரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரை ஜூன் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தை பொறுத்தவரை இயல்பான மழை அளவு 62 மி.மீ. ஆகும். ஆனால் பெய்திருப்பது 56 மி.மீட்டர்தான்.

ஆந்திர மாநிலம் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொருத்த வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →