முகப்பு
தமிழ்நாடு

விலையில்லா ஆடுகள் திட்டம் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு தகவல் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட 'விலையில்லா ஆடுகள்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட 'விலையில்லா ஆடுகள்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் வேளையில், கால்நடைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்பொழுது அந்த துறை சார்பாக அரசின் கொள்கை விளக்க குறிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில்தான் தமிழகத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக 2016 டிசம்பரிலிருந்து 'விலையில்லா ஆடுகள்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மழை பெய்தவுடன் இந்த திட்டம் மீண்டும் துவங்கப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →