தமிழ்நாடு

போக்குவரத்துக்கழக ஊழியர் பிரச்னைக்கு தீர்வுகாண வைகோ வலியுறுத்தல்

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

DIN

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப் பயன்கள், ஓய்வூதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் போராட்டம் முடிவுக்கு வராததால், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களிடம் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி சுமுகமான முடிவு ஏற்படவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம்: அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- ராமதாஸ்

அமித் ஷாவின் பதில்தான் எங்களுடையதும்; கூட்டணி விரிவுபடுத்தப்படும்: தமிழிசை

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்!

முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் - முதல்வர் Stalin

விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT