சென்னை: டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்வாணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்வாணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் தமக்குரிய அனுமதிச் சீட்டினை இணையதளத்தில் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மொத்தமுள்ள 1953 காலியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் ஸ்டெனோ உள்ளிட்ட பணிஇடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று நடக்க உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.