இன்று மாலைக்குள் சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணிகள் துவங்கும்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி!
தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று மாலைக்குள் துவக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஇன்று மாலைக்குள் சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணிகள் துவங்கும்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி!
தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று மாலைக்குள் துவக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று மாலைக்குள் துவக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தின் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது.
விபத்தினால் சேதமடைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தினை இடிக்கும் பணிகள் இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் துவங்கும். கட்டிடத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளதால், மக்களின் பாதுகாப்பபினை கருதி கட்டிடத்தினை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டிட இடிப்பு பணிகளில் ஆட்கள் மற்றும் ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பணியானது மொத்தம் மூன்று நாட்களில் நிறைவடையும். இதற்கு ஆகும் செலவானது சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும்.
இதே போல விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.