தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் தோண்டி வரை தென்மேற்கு பருவக் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT