முகப்பு
தமிழ்நாடு

அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்கக் கூடாது: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் உத்தரவு

புதுச்சேரியில் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:40 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். 

அதில், புதுச்சேரியில் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது.  ஏம்எல்ஏக்கள் அனுமதியின்றி எந்த தொகுதிக்கும் கிரண்பேடி செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால் எம்எல்ஏக்கள்  மறியல் செய்ய வேண்டும்.

அதிகாரத்துக்கு உட்பட்டு ஆளுநர் செயல்படாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →