தமிழ்நாடு

திமுக மேடையில் காங்கிரஸ்: கருணாநிதிக்கு அவமானம்

தினமணி

திமுக மேடையில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டுவது, கருணாநிதிக்கு செய்யும் அவமானம் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடிமரம் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த தேர்தலின்போது கருணாநிதி காங்கிரஸ் கட்சியை பார்த்து கூடா நட்பு கேடில் முடியும் எனக் கூறினார். இன்று அதே காங்கிரஸ் கட்சியினரை மேடையில் அமர்த்தி கருணாநிதிக்கு புகழாரம் சூட்டுகின்றனர். இது அவருக்கு செய்யும் அவமானம்.

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கற்களில் ஹிந்தியில் எழுத உத்தரவு பிறப்பித்தார்.  இதுகுறித்து பேசினால் ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்கின்றனர். ஆனால், அவர்களது குடும்ப வாரிசுகள் ஹிந்தியில் பேசவும், எழுதவும் செய்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT