எங்களால் அரசு கவிழாது: ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு எங்களால் கவிழாது என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு எங்களால் கவிழாது என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து புதன்கிழமை சென்னை செல்ல விமானநிலையத்திற்கு வந்த அவரிடம், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்தித்து வருவதால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுமா? என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து அவர் கூறியது: எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி எங்களால் பதவி இழக்கும் சூழல் ஏற்படாது என்றார். சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ம.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.