தமிழ்நாடு

கிரண்பேடி அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்: நாராயணசாமி திடீர் தில்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை தில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

DIN

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை தில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ள நாராயணசாமி, மத்திய அமைச்சர்கள், அரசு செயலர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், நீட் தேர்வு, மருத்துவப்படிப்பு கலந்தாய்வு குறித்து சுகாத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுய விளம்பரங்களுக்காக அதிகாரங்களை மீறி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது, அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்வை குறைக்க வலியுறுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில் முதல்வர் தில்லி சென்றுள்ளது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் - முதல்வர் Stalin

விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தெரியவில்லை.. வந்தால் பதில் சொல்கிறேன்: ஓபிஎஸ், செங்கோட்டையன் வருகை குறித்து இபிஎஸ்!

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் வாமிகா கபி!

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடங்கியது!

SCROLL FOR NEXT