சிவகாசி: சிவகாசி தெய்வானை நகரில் உள்ள பாலீத்தீன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பாலீத்தீன் காகிதங்கள் எரிந்து நாசமாகியதாக தகவல் வெளியாகி உள்ளது.