முகப்பு
தமிழ்நாடு

டி.டி.வி.தினரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: முதல்வரை முற்றுகையிட்ட எம்.எல் ஏக்கள்!

டி.டி.வி.தினகரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் வற்புறுத்தியதாக.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:45 PM
பகிர்:

சென்னை: டி.டி.வி.தினகரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் வற்புறுத்தியதாக தெரிகிறது 

முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலத்தில் இன்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசினார்கள். சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் பேசிய விஷயங்களாக தெரிய வருபவையாவன:

கட்சியில் தினகரனுக்குத்தான் முன்னிலை தரவேண்டும். விரைவில் நடக்க உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானதுஅவரது தலைமையில் தான் நடக்க வேண்டும்.

அதேபோல டி.டி.வி.தினகரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் கட்சிக்கு ஆதரவு தருவோம்.

அதிமுக சார்பாக வருடா வருடம் நடக்கும் 'இப்ஃதார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சியானது இந்த வருடம் தினகரன் தலைமையில்தான் நடைபெற வேண்டும்., 

சுருக்கமாக கட்சிக்கு அவர்தான் முன்னிலையாக இருந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →