ரஜினி அரசியலுக்கு வருவார் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகர் ரஜினியை இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன் என ரஜினி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
அரசியலுக்கு வந்தால் ரஜினி தனிக்கட்சி தொடங்குவார். ரஜினி அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம் என்று இவ்வாறு அவர் கூறினார்.