தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! 

DIN

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேரின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ ஒப்புதல் அளித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட குறைவான நீதிபதிகளோடு நாட்டில் செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்று. இந்நிலையில் மத்திய அரசோடு ஆலோசித்து, ஆறு நீதிபதிகளின் பெயர்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது.

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு: பவனி சுப்பாராயன், ஜெகதீஷ் சந்த்ரியா, ஸ்வாமிநாதன், தண்டபாணி, தெய்வ சிகாமணி மற்றும் அப்துல்  குதோஷ் ஆகியோரே தற்பொழுது நியமனம் செய்யப்பட்டவர்களாகும்.    

இவர்கள் ஆறு பேரின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT