சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறி: 3 இளைஞர்கள் கைது
சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளன
தமிழ்நாடுசென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறி: 3 இளைஞர்கள் கைது
சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளன
சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக்நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பெண்களை குறிவைத்து தொடர் வழிப்பறி நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் இருசக்கர வாகனத்தில் வந்து இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இளைஞர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் 26, ஜாபர்கான்பேட்டைச் சேர்ந்த முனியப்பன் 18, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையின் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூ.25,000 ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.