தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இயந்திரம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இயந்திரம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் 18 -க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் இந்த இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.
வாக்காளர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தியவுடன், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம், இயந்திரத்தின் உள்புறத்தில் உள்ள கண்ணாடி வழியே தெரியும்.
ஒரு சீட்டில் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் சின்னத்தை வாக்காளர் பார்க்க முடியும். ஒரு சில நிமிஷங்களுக்கு இந்தச் சீட்டு அப்படியே இயந்திரத்தில் நிற்கும். அதன்பிறகு கீழே சென்றுவிடும்.
இதன்பின், வாக்களிக்க வரும் அடுத்த வாக்காளர் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாரோ அந்தச் சின்னம் இயந்திரத்தின் உள்புறத்தில் தெரியும். வாக்காளர் தான் வாக்களித்த வேட்பாளருக்குரிய சின்னத்தை மட்டுமே பார்க்க முடியும். அவருக்கு தனியாக ஒப்புகைச் சீட்டோ அல்லது வேறு சீட்டுகளோ கையில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

SCROLL FOR NEXT