தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்

DIN

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த 2014ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து நீதித்துறையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.  அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கர்நாடகாவின் குலுவாடி ரமேஷ் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.இவர் இதற்கு முன்னதாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவராவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT