சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தில்லி செல்ல இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் பேசியதாக சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நாளை பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் இன்று சென்னையில் இருந்து தில்லி செல்ல இருக்கிறார்.
வறட்சி நிவரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரை நாளை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பல பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.