முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

சென்னை: தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தை ஆண்டு வரும் அம்மா அதிமுக அரசு, புயல் வேகத்தில் செயல்படுகிறது. தமிழக அரசு குறித்து எந்த மோசமான விமரிசனங்களும் கூறப்படலாம். ஆனால், எந்த பொய் பிரசாரங்களும் எடுபடாது. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பு குறித்து விமரிசனம் விளம்பரத்துக்காக செய்யப்படுகிறது என்றார்.

மேலும், எண்ணூர் கடலில் மீன் வளத்தைப் பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக் காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →