தமிழ்நாடு

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது! 

மெரினாவில் தடையை மீறி ஈழப்படுகொலை நினைவேந்தல் பேரணி நடத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

DIN

சென்னை: மெரினாவில் தடையை மீறி ஈழப்படுகொலை நினைவேந்தல் பேரணி நடத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் வகையில், கடந்த வரம் ஞாயிரன்று (21.05.17) சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியை அனுசரிக்க திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் வ.கவுதமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேரணியாக சென்றனர்.

உடன் மே 17 இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களும் பேரணியாக சென்றனர். தடையை மீறி பேரணியாகச் சென்றதாக அப்பொழுது அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் கவுதமன் மற்றும் வேல்முருகன் ஆகியயோர் விடுவிக்கப்பட்டனர்.  

தற்பொழுது அந்த வழக்கில் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT