முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 1,379 ஏரி, குளங்கள் நிரம்பின

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக 1,379 ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக 1,379 ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அண்மையில் கன மழை பெய்தது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. தமிழகத்தில் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் தற்போது 1,379 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பி விட்டன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில்...சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள இரு ஏரிகளும் நிரம்பி விட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217-ம் நிரம்பியுள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →