தமிழ்நாடு

சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்! 

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 8-ஆம் தேதி துவங்கி தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.சில இடங்களில் மட்டும் சோதனை முன்னரே நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக சோதனைக்கு உள்ளானோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன்கள் அனுப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகின.   

இந்நிலையில் சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்பொழுது ஆஜர் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் சகோதரரான சுந்தவதானத்தின் மருமகனே மருத்துவர் சிவகுமார் ஆவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருக்கு சிவகுமார் தனிப்பட்ட மருத்துவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8-ஆம் தேதியே இவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. இவரைத் தொடர்ந்து இன்னும் பலர் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT