தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா காலமானார்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா (83) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். 
திமுகவில் இருந்த குழ.செல்லையா, கடந்த 1971-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அதிமுகவில் இணைந்து மாநில விவசாயப் பிரிவுச் செயலாளராக இருந்தார். 
குழ.செல்லையாவுக்கு செல்வி, புலவர் பூங்கோதை ஆகிய இரு மனைவிகள். இவர்களுக்கு குழ.செ.அருள்நம்பி, அன்புச்செல்வன், வளையாபதி ஆகிய 3 மகன்களும், அரும்பு, அமுதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 
குழ.செல்லையாவின் இறுதி சடங்குகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மாலை 3 மணிக்கு அவரது சொந்த ஊரான பேராவூரணியை அடுத்த முதுகாடு கிராமத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 98651 64567.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT