தமிழ்நாடு

அக்.14-இல் ராமதாஸ் நூல் வெளியீட்டு விழா

DIN

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய பாட்டாளி சொந்தங்களே என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (அக்.14) நடைபெற உள்ளது.
கல்கி வார இதழில் 'பாட்டாளி சொந்தங்களே!' என்ற தலைப்பில் ராமதாஸ் தன் வரலாற்றுத் தொடர் எழுதி வந்தார். அது நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமை வகிக்கிறார். 
திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் க.பழனித்துரை நூலை வெளியிட, பத்திரிகையாளர் மாலன் பெற்றுக் கொள்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவை கவிஞர் ஜெயபாஸ்கரன் தொகுத்து வழங்குகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT