தமிழ்நாடு

அதிமுக அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்

DIN

கடலூர்: கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் பருவமழை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை அதிமுகவின் 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரண்டு எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.

கடலூர் ஆட்சியிர் அலுவலகத்தில் அமைச்சர்கள் உதயகுமார், எம்.சி.சம்பத் தலைமையில் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தை பண்ருட்டி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், காட்டுமன்னார்குடி எம்.எல்.ஏ., முருகுமாறன், கடலூர் எம்.பி. அருண்மொழிதேவன், சிதம்பரம் எம்.பி சந்திரகாசி ஆகியோர் பங்கேற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர். 

அமைச்சர் எம்.சி. சம்பத் தங்கள் தொகுதிக்கு வரும் திட்டங்களை முடக்கி வருவதாகக் கூறி அவர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இச்சம்பவம் அதிமுகவினரிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT